காலி, பலபிட்டிய ஏத்கந்துர பகுதியில் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் சொகுசு மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.
குறித்த சொகுசு மோட்டார் வாகனம் தொலைபேசி துாணில் மோதி விபத்துக்குள்ளானது.
பின்னர் மோட்டார் வாகனம் தீப்பிடித்து எரிந்ததாக அதன் சாரதி பொலிசாரிடம் தெரிவித்தார்.
மோட்டார் வாகனம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்த போது அதனுள் சாரதி உட்பட மூவர் இருந்ததாகவும், விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.