பெலியத்தவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த அதிவேக ரயிலில், கழிவுப் பொருட்களை ஏற்றிச்செல்லும் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடகம,கஹவ பாதுகாப்பற்ற ரயில் குறுக்கு கடவையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரழந்த நபரின் சடலம் கஹவ ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தில் நபரொருவர் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.