அனுராதபுரம் – விலாச்சி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும் மகளும் உயிரிழப்பு

அனுராதபுரம் – விலாச்சி வீதியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலயத்துக்கு அருகில் இன்று (21) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளொன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் - விலாச்சி பகுதியில்

குறித்த விபத்தில் 36 வயதுடைய பெண்ணும் அவரது 9 வயது மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் ராஜாங்கனை 10ம் ராஹுல் வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மதவாச்சியை சேர்ந்த 37 வயதுடைய டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here