கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலை நிறுத்த முயன்ற நபர் ரயிலில் மோதி படுகாயமடைந்தார்.
அவர் சிகிச்சைக்காக டிக்ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று பிற்பகல் 1 மணியளவில் ரொசெல்ல மற்றும் ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கு இடையில் ஹட்டன், மல்லியப்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த நபர் அதிகளவு குடிபோதையில் ரயில் தண்டவாளத்தின் நடுவே ரயிலை நிறுத்த முற்பட்டதாக கூறப்படுகிறது.
41 வயதுடைய நபரே காயமடைந்தார்.
ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்தவர் ஹட்டன் டிக் ஓயா பிரதேசத்தில் உள்ள தோட்டமொன்றில் வசிப்பவர் என அட்டன் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.