யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்று அதிகாலை (18 -11-2023) சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் தனிமையில் இருந்த குறித்த இளைஞர் இன்று அதிகாலை தூட்கிட்டு உயிரிழந்துள்ளார்
காலை சகோதரி வீட்டுக்கு சென்று பார்த்தபோது தூக்கிட்டு உயிரிழந்தநிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்
31 வயதான சந்திரசேகரம் கஜனன் என்ற இளைஞரே தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
இந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.