தாய், பாட்டிக்கு தூக்க மாத்திரை: இரவில் காதலுடன் உல்லாசமாக நடத்துக்கொண்ட சிறுமி!

சென்னையில் தாய் மற்றும் பாட்டிக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியொருவர் காதலனுடன் இரவு நேரங்களில் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சென்னையில் உள்ள முகப்பேர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியும் மன்னார்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் மன்னார்குடி வாலிபர் சிறுமியை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.

இது சிறுமியின் தாய் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் இளைஞனை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் முகப்பேர் பகுதியில் பள்ளி ஒன்றின் அருகில் வைத்து சிறுமியின் காதலனை உறவினர் ஒருவர் பார்த்துள்ளார்.

அவர் குறித்த இளைஞருடன் சண்டை போட்டுள்ளார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் நொளம்பூர் பொலிஸார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் வாலிபரையும், சிறுமியின் உறவினரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

பொலிஸ் விசாரணையில் சிறுமியை இரவு நேரத்தில் சந்தித்து இளைஞர் உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்தது.

தனது தாய், பாட்டியுடன் வசித்து வரும் சிறுமி இரவு நேரங்களில் இருவருக்கும் பாலில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து நன்றாக தூங்க வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் தனது காதலனை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தூக்க மாத்திரைகளை காதலனே சிறுமிக்கு வாங்கி கொடுத்திருப்பதாகவும், கைபேசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாத்திரைகளை வீட்டில் ஒரு பையில் போட்டு வைத்திருந்ததாக தெரிவித்த சிறுமியின் உறவினர்கள் அதுபற்றி மருந்து கடையில் கொண்டு போய் காண்பித்து கேட்டபோது தான் அவை தூக்க மாத்திரைகள் என்பது தெரியவந்தது எனவும் பொலிஸாரிடம் சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சிறுமியின் காதலனிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுமி மீது அவரது உறவினர்கள் சுமத்தியுள்ள இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதன் உண்மை தன்மை தொடர்பில் முழுமையாக விசாரித்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்று பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here