ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இன்று யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் நல்லூரில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த இடத்திலும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.