திரு.எஸ்.கே நாதன் அவர்களினால் இன்றய தினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அமரர்களை ஏற்றும் வண்டி ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஏழை மக்கள் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு பெருந்தொகையான பணம்செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் அவர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு இறந்தவரின் உடலை கொண்டு செலவதில் பெரிதும் சிரமப்படுகின்றார்கள்.
மக்களின் இந்நிலை கண்டு வைத்தியசாலை நிர்வாகம் திரு.எஸ்.கே நாதன் அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் இவ் வாகனத்தை இன்று நன்கொடையாக வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளார்.