நீதிபதியின் பதவி விலகல்.. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமை தொடர்பான அறிக்கை

முல்லைத்தீவு நீதிபதி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டது அவரது வழக்கு விசாரணை ஒன்றுக்காக அவர் சார்பாக நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள சட்டத்தரணியுடன் கலந்தாலேசிப்பதற்காகவே தவிர நீதி மன்ற கட்டளையை மாற்றியமைக்குமாறோ, அல்லது அழுத்தம் கொடுக்கவே அல்ல என நீதிச் சேவைகள் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் என்ன நடந்தது என்ற நிதர்சனம் புரியாமல் வெவ்வேறு நபர்கள் இப் பிரச்சினை தொடர்பில் முடிவெடுக்க முயற்சிப்பதையும், கருத்து தெரிவிப்பதையும் அவதானிப்பது மிகவும் வருத்தமளிக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ள அச் செய்தியில்

கற்றறிந்த நீதிவான் அவர்கள், கெளரவ சட்டமா அதிபர் தன்னை அவரது திணைக்களத்துக்கு வரவழைத்து தனது உத்தரவை மாற்றச் சொன்னார் என்ற நீதிவானின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகும்.

மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 7 எழுத்தாணை விண்ணப்பங்களில் மூன்றில் நீதிவான், தனது அதிகாரப்பூர்வ /தனிப்பட்ட கோதாவில் ஒரு பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.
குறித்த வழக்குகள் 11.10.2023 அன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந் நிலையில்14.09.2023 ஆந் திகதி, கெளரவ சட்டமா அதிபரின் உதவியைக் கோரியும், அவருக்காக ஆஜராகுவதற்கு அரச சட்டவாதி ஒருவரை ஏற்பாடு செய்து தருமாறும் அவர் நீதிச் சேவை ஆணைக் குழுவுக்கு எழுத்து மூலம் முல்லைத்தீவு நீதிபதி கோரியிருந்தார்.

நீதிச் சேவை ஆணைக் குழுவானது தனது 15.09.2023 எனத் திகதியிட்ட கடிதத்தின் மூலம் நீதிவான் சார்பில் மேன் முறையீட்டு நீதி மன்றில் ஆஜராகுமாறு கெளரவ சட்டமா அதிபர் அவர்களை கோரி இருந்தது.

இந்தப் பின்னணியில், அதிகாரிகளின் தேவையான ஒப்புதலுடன் 21.09.2023 அன்று நீதிவானுடன் அவருக்கு எதிராக வழக்கு தொடர்பில் ஆலோசனை நடாத்த சட்டமா அதிபர் முடிவு செய்தார்.

நீதிவான் அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒரு சேவை நாடுனராகவே, சட்டமா அதிபர் திணைக்கள அலுவலர்கள் அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொள்வதற்காக திணைக்களத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

எனவே இது உண்மையில், சட்டத்தரணி-சேவை நாடுனருக்கிடையேயான உறவின் அடிப்படையில் அமையப்பெற்ற ஒரு சந்திப்பாகும்.

திணைக்களத்துடனான கூட்டத்தில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றுவிட்டு, அவருக்கே நன்கு தெரிந்த காரணங்களுக்காக,அவர் இந்த அபத்தமான/ பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

இந்த சந்திப்பின் உண்மையான நோக்கத்திற்கு அவர் ஒரு திருப்பத்தை கொடுப்பது மிகவும் நெறிமுறையற்றதும் தொழில்முறையற்றதுமாகும். என அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதியின் பதவி விலகல்.. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமை தொடர்பான அறிக்கை - Lanka News - Tamilwin News நீதிபதியின் பதவி விலகல்.. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமை தொடர்பான அறிக்கை - Lanka News - Tamilwin News நீதிபதியின் பதவி விலகல்.. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமை தொடர்பான அறிக்கை - Lanka News - Tamilwin News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here