நுவரெலியாவில் பேருந்தும், உந்துருளியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நுவரெலியா – பதுளை பிரதான வீதியில், நுவரெலியா மாநகரசபை மைதானத்திற்கு முன்பாகவே நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
உந்துருளியில் பயணித்த இருவரே படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெளிமடையிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன், நுவரெலியாவில் இருந்து பொரகஸ் பிரதேசத்தை நோக்கி பயணித்த உந்துருளி மோதியுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.