பட்டதாரியான காதலியைத் தாக்கிக் கொன்ற காதலன் கைது!

எல்லக்கல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து காதலன் தாக்கியதில் பலத்த காயங்களுக்குள்ளாகி வத்துபிட்டிவல போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த காதலி உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் விவசாய பட்டதாரியான குருணாகல் ரிதிகம பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

காதலியை தாக்கிய காதலன் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளான காதலி வேறு ஒரு இளைஞருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹோட்டலுக்குள் இரவு முழுவதும் கொடூரமாக தாக்கப்பட்ட காதலி: பொலிஸார் வெளியிட்ட தகவல்

திருமணத்திற்கு முன் விடுதியில் தங்கிய காதலர்கள்!! காதலிக்கு வந்த தொலைபேசி அழைப்பால் பின்னர் நேர்ந்த விபரீதம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here