பொலிஸ் உத்தியோகத்தரின் கையை கடித்த யுவதி

அம்பலாங்கொடை பகுதியில் குடிபோதையில் சென்ற 25 மற்றும் 27 வயதுடைய இருவரை அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, குறித்த இளைஞர்களை மீட்பதற்காக இளைஞர் ஒருவரின் காதலி ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஆக்ரோஷமாக நடந்து கொண்டுள்ளார்.

அத்துடன், அவரையும் கைது செய்ய முற்பட்ட இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தரை கடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கைதுசெய்யப்பட்ட மூவரையும் சனிக்கிழமை (21) பலப்பிட்டிய நீதவான் முன்னிலையில் முன்னிறுத்திய போது எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here