மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை !

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (21) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதான வீதி புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் ஆசிரியையாக கடமை புரியும் சுதாகரன் விஜிதகுமாரி என்பவரே இவ்வாறு தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.

அண்மையில் குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய நிலையில் குடும்பப் பெண்ணுக்கும் தாய் தந்தையருக்கிடையில் ஏற்பட்ட தகராறே காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணகைளில் போது தெரியவந்துள்ளது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார்.

விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here