பதினாறு வயதுடைய பாடசாலை மாணவி வன்புணர்வுற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் திஸ்ஸமஹாராம காவல்துறை பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் திஸ்ஸமஹாராம பிரதேசத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நாற்பத்திரண்டு வயதுடைய ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய ஆசிரியர் அப்பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பணிபுரியும் போது, அந்தப் பாடசாலையில் பதினொராம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவரும் வன்புணர்விற்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த மாணவி வன்புணர்வு தொடர்பில் பாடசாலை அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்ததையடுத்து திஸ்ஸமஹாராம காவல் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் பாடசாலைக்கு வந்து மாணவியின் வாக்குமூலத்தை பதிவு செய்து சந்தேகத்திற்குரிய ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
மாணவி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம காவல் நிலையப் பிரதான காவல்துறை பரிசோதகர் எம். வை. குடாகொட தலைமையில் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
tamilwin news tamil news online tamil win news jaffna news today jaffna today jvpnews jvp news sri lanka tamil news tamilmirror virakesari colombo tamil news newsfirst lanka today lanka news lankasri news Hiru News Tamil Sooriyan Fm News IBC Tamil Sri Lanka Tamil News News1st JVP Sri Lanka IBC News Latest News Sri Lanka News Breaking News dailymirror Oneindia Maalaimalar Dinakaran Ada Derana trincomalee news vavuniya news batticaloa news gossips tamilcnn Aluth Jobs Find latest vacancies in Sri Lanka lanka sri news batti news CINEMA NEWS TAMIL job news Local News mannar tamil news