முல்லைத்தீவில் அழுகிய நிலையில் இளைஞனின் சடலம்

முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேரங்கண்டல் மங்கை நகர் பகுதியில் அழுகிய  நிலையில் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதவுகள் பூட்டப்பட்ட வீடு ஒன்றுக்குள் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (23) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அயலவர்களால் மல்லாவி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய உத்தமன் என கூறப்படுகின்றது.

மேலும் இளைஞனின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பாக மல்லாவி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here