9 வயதில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி ஒருவர் 6 வருடங்களின் பின்னர் குடும்பத்தாருடன் இணைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
15 வயதான சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார்.
மேற்படி சிறுமி கடந்த 6 வருடங்களின் முன்னர்-அவருக்கு 9 வயதாக இருக்கும் பொழுது-அயல் வீட்டார் ஒருவரால் துஷ்பிரயோக்ததுக்கு உட்படுத்தப்பட்டார். இதை எடுத்து அவர் நீதிமன்றத்தின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பபட்டார்.
6 வருடங்களின் பின்னர் இந்த வருடம் ஜனவரியில் வீட்டாருடன் சிறுமி இணைக்கப்பட்ட நிலையில் தற்போது சிறிய தந்தையால் அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பிணியான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்