யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சந்தோஸ் நகைக்கடை மற்றும் நியுமைதிலி நகைக்கடை போன்றவற்றின் முதலாளியும் ( நடராசா கஜேந்திரன் (வயது 44 ) அவரது நகை கடையில் பணிபுரிந்த இளம் யுவதியும் தற்கொலை செய்துள்ளார்.
இருவரும் சுமார் ஓரிரு மணித்தியால இடைவெளியில் தற்கொலை செய்துள்ளனர்.
நாவாந்துறையை சேர்ந்த 22 வயதான யுவதியொருவர் ( செல்வராசா நிலக்சனா ) இன்று தூக்கிட்டு தற்கொலை செய்தார். அவர் நகைக்கடையில் பணிபுரிந்தவர். இவர் இன்று நகைக்கடைக்கு வரவில்லை.
மதியமளவில் தனது வீட்டில் தற்கொலை செய்தார்.
அவர் தற்கொலை செய்த தகவல் நகைக்கடையிலிருந்தவர்களிற்கு தெரிய வந்தது. இதையடுத்து, மதியம் சுமார் 2 மணியளவில் வர்த்தகர் தனது வீட்டிற்கு மதிய உணவு அருந்த சென்றார். வீட்டிலேயே தற்கொலை செய்துள்ளார்.
நாவலர் வீதி, ஆனைப்பந்தியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மனைவி, பிள்ளைகள் தற்போது கொழும்பில் தங்கியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
இரண்டு மரணங்களிற்கும் தொடர்புள்ளதா அல்லது தனித்தனி சம்பவங்களா என பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே வேளை குறித்த யுவதி தற்கொலை செய்தவுடன் நகைக்கடை முதலாளியை யுவதியின் உறவுகள் கடுமையான முறையில் அனுக முற்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவரது தற்கொலை யாழ் நகர வர்த்தகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.