HomeAccident Newsயாழ் செம்மணியில் கோர விபத்து!! மனைவியின் கண் முன்னே கணவன் பலி!!

யாழ் செம்மணியில் கோர விபத்து!! மனைவியின் கண் முன்னே கணவன் பலி!!

மோட்டார் சைக்கிள் – தண்ணீர் தாங்கி வாகனமும் மோதி இடம்பெற்ற விபத்தில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று நண்பகல் யாழ்ப்பாணம் – ஏ9 முதன்மை வீதியின் செம்மணி வளைவிற்கு அண்மையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொக்குவில் கிழக்கு, பொற்பதி வீதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் மனோஜ் (வயது -31) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.

அவரது மனைவி மன்னாரைச் சேர்ந்த துரைராஜ் முகுந்தினி (வயது -26) படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ் செம்மணியில் கோர விபத்து!! மனைவியின் கண் முன்னே கணவன் பலி!! - Lanka News - Tamilwin News யாழ் செம்மணியில் கோர விபத்து!! மனைவியின் கண் முன்னே கணவன் பலி!! - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments