யாழ்.புத்துார் – நிலவரை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி!

யாழ்.புத்துார் – நிலாவரை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த முதியவர் மீது டிப்பர் வாகனம் மோதி குறித்த விபத்து இடம்பெற்றிருக்கின்றது.

சம்பவத்தில் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சுப்பையா இரத்தினசிங்கம் வயது 63 என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.புத்துார் - நிலவரை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி! - Lanka News - Tamilwin News யாழ்.புத்துார் - நிலவரை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி! - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!