10 வயது மாணவி வன்புணர்வு – 59 வயதான பாடசாலை பிரதி அதிபர் கைது!

தரம் 5 மாணவியை வன்புணர்விற்குள்ளாக்கிய பாடசாலை பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், காவல்துறையினர் பிரதி அதிபரை கைது செய்துள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி சந்தேகத்திற்குரிய பிரதி அதிபரால் மாணவி பாடசாலையில் வைத்து வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டதாக பெற்றோர் அளித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று (16) கராப்பிட்டிய சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறுமியை முன்னிலைப்படுத்திய நிலையில் சந்தேகத்திற்குரிய பிரதி அதிபர் ஹபராதுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது காவல்துறையின் விளக்கமறியலில் உள்ள 59 வயதான சந்தேகநபரான பிரதி அதிபர் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here